|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 11

Day – 11 (11- டிசம்பர், 2023)

நல்ல சபை தந்தீர் நன்றி

நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும் தலை இயேசு. இதுதான் சபையின் விளக்கம். உலகம் முழுவதிலும் உள்ள சபை எல்லாமே இயேசுவின் அங்கம் தான். ஆனால் நாம் தான் அதைப் புரிந்து கொள்ளாமல், என் சபை பெரிது, உன் சபை பெரிது என்று சண்டை இட்டுக் கொள்கிறோம்.

இன்று நாம் நமக்கு தேவன் கொடுத்த சபைக்காக நன்றி சொல்லப் போகிறோம். எத்தனையோ சபைகள் இருந்தாலும், தேவன் நமக்கென்று ஒரு நல்ல சபையைக் கொடுத்திருக்கிறார். அது பாரம்பரிய சபையாக இருக்கலாம், ஆவிக்குரிய சபையாக இருக்கலாம். ஆனால், அந்த இடம் நாம் இயேசுவுடன் உறவாட நம்மை வழி நடத்துகிறது அல்லவா. வேத விளக்கங்கள் அறிய உதவும் இடமாக நம் சபை இருக்கிறதல்லவா! அனேக ஆவிக்குரிய நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா! அதற்காக நன்றி சொல்வது அவசியம் அல்லவா!

நாம் சபையில் ஏராளமாக ஜெபிக்கிறோம். தேசத்துக்காக ஜெபிக்கிறோம். நம் தேவைகளுக்காக ஜெபிக்கிறோம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கிறோம். அனேக பாடல்கள் பாடுகிறோம். சாட்சிகள் கேட்கிறோம். விசுவாசம் தட்டி எழுப்பப்படுகிறது. சோர்ந்து போன நேரத்தில் எல்லாம், வார்த்தைகள் பேசுகிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

இப்போது யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை சபை என்ற கட்டடம் இல்லை. ஆதிகால அப்போஸ்தலர் போல, ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நம் கையில் வேதாகமம் உள்ளது. நாமே வேதத்தை படித்து கொள்ள வேண்டும், ஏனெனில், சபை கிடையாது. நாம் எந்த அளவு வேத அறிவில் இருப்போம் என்று யோசித்து பார்ப்போம். சின்ன வயதில், சண்டே கிளாஸ் போயிருக்க மாட்டோம். வேதாகம கதைகள் நமக்கு தெரிந்திருக்காது. வேதம் வாசித்தாயா? என்று கேட்க யாரும் இல்லை. எனவே வேதம் வாசிக்க தோணாது. எப்படித்தான் கர்த்தரிடம் நெருங்க முடியும்? ஆதிகால அப்போஸ்தலர்கள், அதனால் தான் அவர்கள் போகிற இடமெல்லாம் சபையை நிறுவினார்கள். இன்று நமக்கு சபை இருக்கிறது, நம்மை கண்காணிக்க போதகர் இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *