|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

Day – 16 (16- டிசம்பர், 2023)

தெய்வீக சமாதானத்துக்காக நன்றி

தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா.

உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad) காரியங்களில் சமாதானம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால், உம்மை விசுவாசிக்கிற எனக்கு, என் வாழ்வில் கெட்ட காரியமாய் எதுவும் தோன்றினாலும் கூட, அதை நீர் நன்மையாக மாற்றுவீர் என்ற சமாதானம் இருக்கிறது. அதற்காக நன்றி அப்பா.

நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்க இயேசப்பா. உங்க சமாதானத்தை எனக்கு தருவேன் என்று. அதை இயேசுவின் நாமத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் பேசுகிறேன். கர்த்தருடைய சமாதானம் எங்களோடு இருப்பதாக. என் இருதயத்தில் தேவையற்ற கலக்கங்கள், பயங்கள் வரக்கூடாது. என் வாழ்வில் சில காரியங்களில் நான் தோற்றதுபோல இருக்கலாம், சில காரியங்களில் உலகம் என்னை நிந்திக்கலாம். எனக்கு விசுவாசம் இருக்கிறது, எனக்கு நீர் கொடுத்தது உங்க சமாதானம். அது தெய்வீக சமாதானம். அதற்கு expiry கிடையாது. இயேசுவின் நாமத்தில், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தெய்வீக சமாதானத்தை பேசுகிறேன்.

எனக்கு இது இல்லை, அது இல்லை என்று குறைபட வரவில்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று விண்ணப்பம் பண்ண வரவில்லை. உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இயேசப்பா. என் குறைவுகள், இழப்புகள் எவ்வளவு இருந்தாலும், என் உள்ளத்தில் உம் தெய்வீக சமாதானம் இருக்கிறது. கலக்கங்கள் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும், நீர் செய்த நன்மையை நினைக்கும்போது, ஒரு தெய்வீக சமாதானம் வருகிறது. அதற்காக நன்றி இயேசப்பா.

பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

Thiru Viviliam
அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

 “The peace of God which is beyond our understanding will guard your hearts and your thoughts in Christ Jesus” (Phil 4:7).

தேவனுடைய சமாதானம் என்பதை வேதம் beyond our understanding என்று சொல்கிறது. இயேசப்பா, எங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, நீங்க எங்களுக்கு தந்து, எங்க இருதயத்தை, எங்க சிந்தையை இதுவரை பாதுகாத்து இருக்கீங்க. அதற்காக நன்றி.

உங்க சமாதானம் எனக்குள் இருந்ததால தான், நான் மன அழுத்தத்துக்குள்ள போகலை. எனக்கு தற்கொலை எண்ணம் வரவில்லை. அடிமைத்தனத்துக்குள் போகலை. அதற்காக நன்றி. என்னை ஜீவனோடு வைத்திருப்பது, உங்க சமாதானம் இயேசப்பா. அதற்காக நன்றி.

இயேசப்பா, என் வாழ்வில், எவ்வளவு புயல் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அவமானங்கள் வந்தாலும், இம்மட்டும் என்கூட இருந்து பாதுகாத்த உங்க தெய்வீக சமாதானம், என் வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாக்க வேண்டும். நீங்க கொடுத்த, கொடுக்கப்போகிற தெய்வீக சமாதானத்துக்காக நன்றி இயேசப்பா. ஆமென்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

    Day – 14 (14- டிசம்பர், 2023) புதிய ஆரம்பங்களுக்காக நன்றி இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம். தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

      Day – 1 (01- டிசம்பர், 2023) உயிரோடு இருப்பதற்காக நன்றி இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா? என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *