|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

Day – 17 (17- டிசம்பர், 2023)

சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி

1 கொரிந்தியர் 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

Tamil Easy Reading Version
எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.

நமக்கு அது தவறு என்பது தெரியும். ஆனால் அதை நோக்கி இழுக்கப்படுவோம். நாம் கஷ்டப்படலாம், அல்லது இன்னொருவரை கஷ்டப்படுத்தலாம், அல்லது இருவருமே கஷ்டப்படலாம். ஆனால் நம்மால், No சொல்ல முடியவில்லை. அதுதான் சோதனை. தவறு என்பது தெரிந்தாலும், நாம் செய்வது தான் சோதனையில் தோற்றுப்போவது.

இந்த வசனத்தில், சோதனையில் இருந்து விடுபடும் வழியை தேவன் காட்டுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே நமக்கு சோதனை வருகிறது என்றால், அதில் தப்பும் வழி அதற்கு முன்பாகவே நமக்கு அருகில் இருக்கும். அதை உணர்வதற்கு பரிசுத்த ஆவியானவர் தேவை.

கெட்ட குணம் என்பதை விட சோதனை என்பது அதிகமாக நம்மை ஆட்கொள்ளும். ஒரு மனிதனை எதிரில் பார்க்கிறோம், அவனை பார்த்து வெளியே சிரித்தாலும், மனதினுள் கோபம், வெறுப்பு, கசப்பு, பழி வாங்கும் வெறி, பொறாமை எல்லாம் இருக்கிறது அல்லவா! இதுதான் நமக்கு வந்த சோதனை. இந்த சோதனையில் நாம் வெற்றி பெற்றோமா? ஒரு குறிப்பிட்ட காலம் கடந்ததும் எல்லாம் மறந்து போய்விடும் என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல, நம் இருதயத்தில் வேத வசனம் உள்ளே போக போக, நாம் கசப்பை மறந்து வெளியே வந்துவிட்டோம். நமக்குள் ஆவியானவர் கிரியை செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.

சிலர் எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். நம் குணம் அப்படி அல்லவே. நாம் பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம் அல்லவா! இது தான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.

ஒரு ஆண் அல்லது பெண், தவறான நோக்கத்தில் நம்மிடம் பழகினால், நம் இருதயத்தில் மணி அடிக்கிறது அல்லவா! நாம் சீக்கிரமாக, அவரை விட்டு வெளியே வருகிறோம் அல்லவா! ஏனெனில் அந்த நேரத்தில் சோதனைக்கு தப்பும் வழி செயல்பட்டிருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

நாம் எல்லாருமே சமூக வளைதளங்கள் உபயோகிப்பவர்கள். திடீரென, இச்சையை தூண்டும்விதமான படம் வந்தால், உடனே பதறி வெளியே வந்து விடுகிறோம் அல்லவா! உள்ளே சென்று பார்க்கவில்லையே. அதுதான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.

ஒருவேளை ஏதோ ஒரு அடிமைத்தனத்தில் இருந்தால் கூட, கர்த்தர் அப்படியே நம்மை கைவிடவில்லையே. அடுத்த தருணம் கொடுத்து வெளியே கொண்டு வந்தார் அல்லவா! ஒரு பாவம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து, அனேகம் தரம் நாம் விழுந்தாலும், ஆண்டவர் சோர்ந்து போகாமல் நம் மேல் நம்பிக்கை வைத்து தூக்கி விடுகிறார் அல்லவா! நன்றி சொல்வோம்.

ஒரே ஒரு காரியம் தான். வேதம் வாசிப்பவராக நாம் இருந்தால், சோதனையைப் பார்த்து நாம் பயப்படவே வேண்டாம். சோதனைக்கு தப்பும் வழியே தேவனுடைய வார்த்தை தான். நாம் வேதம் வாசிக்கிறோம் அல்லவா!  அதற்காக நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *