|

விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

நீதிமான்

நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான்.

  • மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)
  • நியாயப்பிரமாணத்தின் கிரியையால், மனுஷன் நீதிமான் ஆக்கப்படுவதில்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே, நீதிமானாக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவின் மேல், நான் விசுவாசி ஆனேன். (கலா 2-15)
  • நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் அல்ல. விசுவாசத்தினாலேயே, நான் நீதிமான் ஆக்கப்பட்டேன். (ரோமர் 3-28)
  • கிரியைகள் இல்லாமல், தேவனாலே, நீதிமான் என்று எண்ணப்படுகிற பாக்கியம், எனக்குக் கிடைத்தது. (ரோமர் 4-6)
  • அவர் என் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நான் நீதிமான் ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். (ரோமர் 4-26)
  • நான் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான் ஆக்கப்பட்டிருக்கிறேன். (ரோமர் 5-9)
  • இலவசமாய் அவருடைய கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு, நீதிமான் ஆக்கப்பட்டேன். (ரோமர் 3-24)
  • தேவனே என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். (ரோமர் 8-33)
  • அவருடைய கிருபையினாலே, நான் நீதிமான் ஆக்கப்பட்டு, நித்திய ஜீவன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். (நீத்து 3-6)
  • கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும், கழுவப்பட்டேன், பரிசுத்தமாக்கப்பட்டேன், நீதிமான் ஆக்கப்பட்டேன்.

நான் நீதிமான்

  1. நான் நீதிமான். என் வழியை கர்த்தர் அறிந்திருக்கிறார். (சங் 1-6)

  2. நான் நீதிமான். கர்த்தர் என்னை ஆசிர்வதித்து, காருண்யம் எனும் கேடகத்தினால் என்னை சூழ்ந்து கொள்கிறார். (சங் 5-12)

  3. நான் நீதிமான் கர்த்தர் என்னை ஸ்திரப்படுத்துகிறார். (சங் 7-9)

  4. நான் நீதிமான். நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுவேன். (சங் 32-11)

  5. நான் நீதிமான். கர்த்தருடைய கண்கள் என் மேல் நோக்கமாய் இருக்கிறது. (சங் 34-15)

  6. நான் நீதிமான். நான் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, என்னை, என்னுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார். (சங் 34-17)

  7. நான் நீதிமான். நான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வேன். (சங்37-29)

  8. நான் நீதிமான். எனக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங் 97-11)

  9. நான் நீதிமான். கர்த்தர் என்னை சிநேகிக்கிறார். (சங்146-8)

  10. நான் நீதிமான். என்னுடைய பாதை, நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போலிருக்கும். (நீதி 4-18)

  11. நான் நீதிமான். கர்த்தர் என்னை பசியினால் வருந்த விடார். (நீதி 10-3)

  12. நான் நீதிமான். என்னுடைய சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும். (நீதி 10-6)

  13. நான் நீதிமான். என்னுடைய பெயர் புகழ் பெற்று விளங்கும். (நீதி 10-7)

  14. நான் நீதிமான். என்னுடைய வாய் ஜீவ ஊற்று. (நீதி 10-11)

  15. நான் நீதிமான். என் பிரயாசம் ஜீவன். (நீதி 10-16)

  16. நான் நீதிமான். என்னுடைய நாவு சுத்த வெள்ளி. (நீதி 10-20)

  17. நான் நீதிமான். என்னுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும். (நீதி 10-21)

  18. நான் நீதிமான். நான் விரும்புகிற காரியம் எனக்குக் கொடுக்கப்படும். (நீதி 10-24)

  19. நான் நீதிமான். நான் நித்திய அஸ்திபாரமுள்ளவன். (நீதி 10-25)

  20. நான் நீதிமான். என்னுடைய நம்பிக்கை மகிழ்ச்சி. (நீதி 10-28)

  21. நான் நீதிமான். நான் என்றும் அசைக்கப்படுவதில்லை. (நீதி 10-30)

  22. நான் நீதிமான். என்னுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும். (நீதி10-31)

  23. நான் நீதிமான். என் உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும். (நீதி 10-32)

  24. நான் நீதிமான். நான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவேன். (நீதி 11-8)

  25. நான் நீதிமான். நான் அறிவினால் தப்புவேன். (நீதி 11-9)

  26. நான் நீதிமான். நான் நன்றாக இருந்தால் பட்டணம் களிகூறும். (நீதி 11-10)

  27. நான் நீதிமான். என் சந்ததி விடுவிக்கப்படும். (நீதி 11-21)

  28. நான் நீதிமான். என் ஆசை நன்மையே. (நீதி 11-23)

  29. நான் நீதிமான். நான் துளிரைப் போல் தழைப்பேன். (நீதி 11-26)

  30. நான் நீதிமான். என் பலன் ஜீவ விருட்சம். (நீதி 11-30)

  31. நான் நீதிமான். என் வேர் அசையாது. (நீதி 12-3)

  32. நான் நீதிமான். என் நினைவுகள் நியாயமானவைகள். (நீதி 12-5)

  33. நான் நீதிமான். என்னுடைய வீடு நிலை நிற்கும். (நீதி 12-7)

  34. நான் நீதிமான். என் வேர் கனி கொடுக்கும். (நீதி 12-12)

  35. நான் நீதிமான். நான் நெருக்கத்தினின்று நீங்குவேன். (நீதி 12-13)

  36. நான் நீதிமான். என் அயலானைப் பார்க்கிலும் நான் மேன்மையுள்ளவன் (நீதி 12-26)

  37. நான் நீதிமான். என் வெளிச்சம் சந்தோஷம் கொடுக்கும். (நீதி 13-9)

  38. நான் நீதிமான். எனக்கு நன்மை பலனாக வரும். (நீதி 13-21)

  39. நான் நீதிமான். நான் எனக்கு திருப்தியாக புசிக்கிறேன். (நீதி 13-25)

  40. நான் நீதிமான். என் மரணத்திலே எனக்கு நம்பிக்கை உண்டு. (நீதி 14-32)

  41. நான் நீதிமான். என் வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு. (நீதி 15-6)

  42. நான் நீதிமான். என் வழி ராஜபாதை. (நீதி 15-19)

  43. நான் நீதிமான். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறார். (நீதி 15-29)

  44. நான் நீதிமான். என் பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள். (நீதி 20-7)

  45. நான் நீதிமான். நான் பிசினித்தனம் இல்லாமல் கொடுப்பேன். (நீதி 21-26)

  46. நான் நீதிமான். என் தகப்பன் மிகவும் களிகூறுவான். (நீதி 23-24)

  47. நான் நீதிமான். நான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பேன். (நீதி 24-16)

  48. நான் நீதிமான். நான் சிங்கத்தைப் போல தைரியமாக இருப்பேன். (நீதி 28-1)

  49. நான் நீதிமான். நான் பாடி மகிழுவேன். (நீதி 29-6)

  50. நான் நீதிமான். நான் ஏழைகளின் நியாயத்தை கவனித்து அறிவேன். (நீதி 29-7)

  51. நான் நீதிமான். எனக்கு நன்மை உண்டாகும். (ஏச 3-10)

  52. நான் நீதிமான். தீங்கு வராததற்கு முன்னே நான் எடுத்துக் கொள்ளப்படுவேன். . (ஏச 57-1)

  53. நான் நீதிமான். நான் பிதாவின் ராஜ்ஜியத்திலே சூரியனைப் போல பிரகாசிப்பேன். ( மத்தேயு 13-43)

  54. நான் நீதிமான். நான் செய்யும் ஊக்கமான வேண்டுதலுக்கு மிகுந்த பலன் உண்டு. (யாக் 5-16)

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

    Day – 19 (19- டிசம்பர், 2023) இரட்சிப்புக்காக நன்றி தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

    Day – 6 (06- டிசம்பர், 2023) விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம். நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *