|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

Day – 2 (02- டிசம்பர், 2023)

நல்ல குடும்பத்துக்காக நன்றி

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே என்று கவலைப்படுவோம். ஆனால் இதுவரை உடனிருந்த பெற்றோர் நல்ல பெற்றோராக இருந்திருப்பார்கள். நல்ல நண்பர்கள் இருந்திருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருந்திருக்கும், அதையெல்லாம் மறந்து விடுவோம். நம் குடும்பத்துக்காக நன்றி சொல்வது அவசியம். கர்த்தர் நம்மை கிருபையாக நடத்திக் கொண்டு வருகிறார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதை யோசித்து நன்றி சொல்லி இருக்கிறோமா? 

இரண்டு மாதங்களுக்கு முன், உடன் படித்த இரு கல்லூரி தோழிகளிடம் பேசினேன். இருவருமே, கல்லூரி விடுதியில் படித்தவர்கள், மிகவும் நல்ல பிள்ளைகள், தங்கள் வாலிப நாட்களை கறைபடாமல் காத்தவர்கள். அவர்களிடம் பேசும்போது, திருமண வாழ்வில் அடி, உதை என்று கஷ்டப்படுகிறார்கள். நீ சந்தோஷமாக இல்லையா என்று வருத்தத்துடன் கேட்கும்போது, “கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கிறேன்” என்கிற பதில் கிடைத்தது. நான் உண்மையில் உடைந்து தான் போனேன். அதேபோல, என் மேற்படிப்பில் என்னுடன் படித்த தோழியும் அதே சூழலில் இருக்கிறாள். இதைக் கேள்விப்படும்போது தான், கர்த்தர் எனக்கு கொடுத்த கிருபையையே உணர முடிந்தது என்னால்.

ஒருவரை எவ்வளவு சோதிக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும் என்று கூறுவார்கள். அது ஒருவேளை உண்மைதான் போல. “அவர்கள் சோதனையிலும் கர்த்தரை விட்டு பின்வாங்காதவர்கள்” என்று தேவன் அறிந்ததினால்தான், அவர்களுக்கு இவ்வளவு பாடுகள் என்று எண்ணிக்கொண்டேன். தங்கள் சோதனைக்காக நன்றி சொல்கிற தோழிகள். அவர்களிடம் பேசிய பின்னர் தான், என் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்திருக்கிற கிருபையை உணர முடிந்தது. “என் விசுவாசம், நான் கர்த்தரை நேசிப்பது எல்லாவற்றையும் விட, அவர்கள் இருக்கும் சூழலில், அவர்கள் கர்த்தரை நேசிப்பது பெரிய காரியம்” என்பதை கற்றுக்கொண்டேன்.

இன்று நம் வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அந்த ஒரு பிரச்சனையை எண்ணி மற்ற காரியங்களில் தேவன் கொடுத்த கிருபையை மறந்து விடக் கூடாது.  இன்றைய பிரச்சனைகள், இதுவரை தேவன் கொடுத்த நன்மையை மறக்க வைப்பதாக இருக்கக் கூடாது. இன்று ஒருவேளை உங்களுக்கு 50 வயதாகிறது என்றால், தேவன் கொடுத்த பெற்றோர், தேவன் கொடுத்த உடன்பிறப்புகள், தேவன் கொடுத்த வாழ்க்கைத்துணை, தேவன் கொடுத்த பிள்ளைகள், தேவன் கொடுத்த மருமக்கள் எல்லாம் எண்ணிப்பார்த்து நன்றி சொல்லவேண்டும். நம் வாழ்வில் பிரிவினை இருந்தால் கூட, கர்த்தருக்கு தெரியாமல் எதுவும் என் வாழ்வில் நடக்காது என்ற உறுதியுடன் துதிக்கலாமே.

பலர், பெற்றோர் இல்லாமல், இல்லங்களில் வளர்ந்தார்கள், பலர் வாழ்க்கைத்துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள், பல குடும்பங்கள் பிரிந்து தான் இருக்கிறது, ஆனால் கர்த்தர் நடத்துகிறார் அல்லவா? யாரையுமே கைவிடவில்லையே! சில தாமதங்கள் இன்று இருந்தாலும், ஒரு நாள் ஒன்று வரும், அது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் நாள், அன்று எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக உயர்த்துவார் தேவன். இன்று, இப்போது, நாம் எவ்வளவு கோபப்பட்டாலும், நம்முடன் இருக்கிற ஏதோ ஒரு உறவு, நமக்கு இருக்கிறதல்லவா! இல்லாத உறவை எண்ணி வருத்தப்படுவதை விட, கூட இருக்கும் உறவுகளுக்காக இன்றைக்கு தேவனுக்கு நன்றி சொல்வோமே.  

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

    நீதிமான் நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *