|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

Day – 8 (08- டிசம்பர், 2023)

 நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி

இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த நண்பர் குடும்பத்தில், உறவினராக அல்லது உடன் பிறந்தவராக, அல்லது பெற்றோராக, பிள்ளைகளாக இருப்பர். ஜெபிக்க சொல்லும்படி, நம் சபையில் யாரோ ஒருவர் இருப்பார்கள், அல்லது குடும்பத்தில் யாரோ ஒருவர் இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுக்காக நன்றி சொல்ல வேண்டும்.

யார் ஒருவராலும், யாரிடமும் 100 சதவீதம் முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளுமளவு, சில நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதாவது, குடும்பத்தில் உள்ளவர் நெருக்கடி கொடுத்தால், ஜெபத்தேவைக்காக பகிர வெளியே ஒரு நண்பர், வேலை செய்யுமிடத்தில் நெருக்கடி என்றால் பகிர ஒரு குடும்பத்தினர், இப்படி நமக்கு அனேகர் இருக்கிறார்கள். இன்று அனேக குழந்தைகள் தற்கொலைக்கு காரணமே, பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத சூழ்நிலை தான். நமக்கு தேவன் கிருபை பாராட்டி இருக்கிறாரே. அதற்காக நன்றி சொல்வோம்.

பண உதவி செய்தால்தான் நண்பர்கள் என்றால், யாருக்கும் நண்பர்களே இருக்க முடியாது. நாம் பேசுவதைக் கேட்க யார் இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. இந்த பிசியான உலகில், நம் பேச்சையும் கேட்க ஒருவர் இருக்கிறாரே. நன்றி சொல்லலாமே! நம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு யாரெல்லாம் உதவியாக இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் தந்த பரிசு.

என் அனுபவத்தில், எனக்கு சில நண்பர்கள் தேவன் கொடுத்தார். நாங்கள் மதிய நேரத்தில் இணைந்து ஜெபித்தோம், பல காரியங்கள் புதிதாக கற்றுக் கொண்டோம். நான் சென்னை, ஒருவர் நாகர்கோவில், மற்றொருவர் துபாய். எங்கெங்கோ இருந்து இணைந்து ஜெபித்தோம். நல்ல நண்பர்கள் மூலமாக தேவன் என்னை வழி நடத்தினார். சபையில் நல்ல ஐக்கியத்தை தந்தார். நல்ல போதகர்கள் வழியாக நல்ல ஆவிக்குரிய வளர்ச்சி கொடுத்தார். கணவருடைய ஜெபக்குழுவில் நல்ல ஐக்கியத்தை தந்தார். கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர், தினமும் தவறாமல் என் பதிவை வாசித்து, இப்படி எழுது, இது நன்றாக இருந்தது என்று, அவருடைய பிஸி வாழ்க்கையிலும் ஊக்குவிக்கிறார், ஒவ்வொரு பதிவுக்கும், குடும்பத்தினர் சிலர் வாசித்து Thumbs up கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். நல்ல குடும்ப உறவுகளைத் தந்திருக்கிறார். ஜெபிக்கும் பெற்றோரை தந்திருக்கிறார். ஒவ்வொரு உறவுக்காகவும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

நம் வாழ்க்கையில் ஒருவேளை நாம் சிலரை முக்கியமானவராக நினைக்காமல் இருப்போம், ஆனால் அவர்கள் நமக்கு நிறைய நேரங்களில் ஆலோசனை தந்திருப்பார்கள். நம்முடன் இருந்திருப்பார்கள். நமக்காக ஜெபித்திருப்பார்கள். அப்படிப்பட்ட யாரை எல்லாம் தேவன் இப்போது, நினைவு படுத்துகிறாரோ, அவர்களுக்காக இன்று நன்றி சொல்லலாமே!

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

    Day – 14 (14- டிசம்பர், 2023) புதிய ஆரம்பங்களுக்காக நன்றி இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம். தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *