|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

Day – 14 (14- டிசம்பர், 2023)

புதிய ஆரம்பங்களுக்காக நன்றி

இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம்.

தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த காரியத்தினால், நமக்கு கசப்பு இருந்திருக்கும், ஆனால் ஒருகட்டத்தில், “அவர்களைப் பற்றி நினைத்து என்ன ஆகப்போகிறது” என்று, அதை நினைக்காமல், அல்லது நம் கசப்பை மறந்து வாழ்கிறோம் அல்லவா! அப்போது, கசப்பான இருதயம் போய், நமக்கு புதிய இருதயம் தேவன் கொடுத்து இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

சில நேரங்களில், நமக்கு பணத்தேவைகள் இருந்திருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழ்நிலையில், அற்புதமாக நடத்தினார் அல்லவா! இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ஏதோ ஒரு சூழலில் இதை அனுபவித்திருப்போம். என்ன செய்வது என்று பயந்த வேளைகளில், புதிய ஆரம்பத்தைக் கொடுத்து வழி நடத்தினார் அல்லவா! அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

அவருடைய கிருபைகள் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது என்று வேதத்தில் படிக்கிறோம். அப்படியானால், இந்த வருடம் முழுவதிலும், நமக்கு எத்தனை கிருபைகள் கொடுத்திருப்பார்! ஒரு நாள் தயவு என்ற கிருபையை கொடுத்திருப்பார், ஒரு நாள் ஆசீர்வாதம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் பாதுகாப்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் சந்தோஷம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் ஆறுதல் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் அன்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வருடம் முழுவதிலும், அவர் கொடுத்த புது கிருபைக்காக நன்றி சொல்லலாம்.

தேவன் நமக்கு புதிய ஆவியைக் கொடுத்தார், நன்றி சொல்லலாம். நமது சூழலால், நம் ஆத்துமா சோர்ந்து போய்க் காணப்பட்டிருக்கும், ஆனால் நாம் வேதத்தை எடுத்து படிக்கும்போது, அல்லது அவருடைய வார்த்தையை ஊழியர் மூலமாகக் கேட்கும்போது, நம் விசுவாசம் தட்டி எழுப்பப்பட்டது அல்லவா! சோர்ந்து இருந்து ஆவி, உற்சாகமாக மாறியது அல்லவா! அந்த புதிய தொடக்கத்துக்காக நன்றி சொல்லலாம்.

நாம் பழைய மனுஷனைக் களைந்து போட்டு, புது சிருஷ்டி ஆகியிருக்கிறோம் அல்லவா! என்றைக்கு நாம் இரட்சிக்கப்பட்டோமோ, அன்றே புது சிருஷ்டி ஆகி விட்டோம். ஆதாமின் DNA நம்மிலிருந்து விலகி, கிறிஸ்துவின் DNA நமக்குள் வந்து விட்டது. இயேசுவின் சொந்த பிள்ளைகளாகி விட்டோம். நமக்குள் வந்த அந்த புதிய ஆரம்பத்துக்காக நன்றி சொல்லலாமே!

புதிய வருடம் 2023ஐ காணச் செய்தார் அல்லவா! 2023ல் ஒவ்வொரு புதிய மாதத்தையும் காணச்செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். அனேக மரணங்கள் நடந்தாலும், நாம் 2024ஐ காணப்போகிறோம் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.

இது போக, நம் பிள்ளைகள் படிப்பில் புதிய ஆரம்பங்கள், நம் வேலையில் புதிய ஆரம்பங்கள், புதிய சேமிப்பு திட்டங்கள், புதிய பொருட்கள் வாங்கி இருப்போம், இன்னும் பல நன்மைகள் செய்தாரே. இந்த புதிய ஆரம்பங்களை நினைவு கூர்ந்து தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *