|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

Day – 15 (15- டிசம்பர், 2023)

ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி

பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள், நம் குடும்பத்துக்குள் கிளர்ச்சி வரும்… வாழவே பயமாக இருக்கும் சூழல் இருக்கும்… இதெல்லாம் ஒரு வகையான ஆவிக்குரிய யுத்தம்தான்.

இத்தனை காரியங்கள் கொண்டுவந்து, நம்மை தோற்கடிக்க சாத்தான் வகை தேடினாலும், இன்னும் நாம் விசுவாசத்தில் இருந்து விழுந்து விடாமல், “இயேசுவே” என்று அவரிடமே செல்கிறோம் அல்லவா! இந்த ஒரு வெற்றிக்காகவே நாம் அவருக்கு நன்றி சொல்லலாம்.  ஆம், நாம் எந்த பிரச்சனை வந்தாலும், நம் விசுவாசத்தை தளர விடவில்லை. அவரை மாத்திரமே நோக்கி பார்க்கிறோம். இதற்காக நன்றி சொல்வோம்.

நாம் ஜெபித்து அனேக காரியங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். தானியேல் ஜெபிக்கும்போது, உடனே தூதனுக்கு, தானியேலுக்கு பதில் கொடுக்கும்படி, கட்டளை வெளிப்பட்டது. ஆனால், பதிலைக் கொண்டு வர விடாமல், பெர்சிய தேசத்தின் அதிபதி (பெர்சிய தேசத்தின் மீது ஆளுகை கொண்ட சாத்தான்) தடுக்கிறான். 21 நாட்கள் கழித்து தான், தானியேலுக்கு பதில் கிடைக்கிறது. தானியேலுக்கே 21 நாட்கள் தேவைப்பட்டது, தானியேல் எப்படிப்பட்டவர்? ராஜா ஜெபிக்க கூடாது என்று கட்டளையிட்டாலும் ஜெபிக்கிறவர், சிங்க கெபிக்குள் போட்டாலும் ஜெபிக்கிறவர். அப்படிப்பட்ட அவருக்கே அவ்வளவு நாட்கள் என்றால் நமக்கு??? ஆனால் நம்மை தேவன் கைவிடவில்லையே. நாம் ஜெபிக்கிற காரியங்களைப் பெற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். ஒருவேளை இன்று தாமதமாக தெரிந்தாலும், தேவன் நமக்காக செய்வார் என்ற விசுவாசம் இருக்கிறதல்லவா! தேவன் நமக்கு பதில் கொடுத்த எல்லா கரியங்களுக்காகவும் நன்றி சொல்வோம். அது எல்லாமே ஒரு ஆவிக்குரிய யுத்தத்தை முடித்து தான் நம் கைகளில் வந்திருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.  இன்றும் நமக்கான யுத்தம் நடந்துகொண்டு தான் இருக்கிறது, அதை எண்ணி நன்றி சொல்வோம்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, அவருடைய ஆவியினாலே ஆகும் என்று வேதம் சொல்கிறது. அவருடைய ஆவி எங்கு இருக்கிறது? நமக்குள் இருக்கிறது. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர், இன்று நமக்குள்ளும் இருக்கிறார். அவர் மரணத்தை ஜெயித்தார், சாத்தானை தோற்கடித்தார், அவர் தங்கும் ஆலயம் நாம். இவ்வளவு பெரிய பாக்கியம் தேவன் நமக்குக் கொடுத்ததற்காக நன்றி சொல்வோம். அந்த ஆவியானவரே நமக்குள் இருக்கும்போது, நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் தோற்றுப் போவோமா?

  1. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
    12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
    13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
    14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
    15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
    16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
    17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
    18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

எபேசியர் 6

இந்த வசனங்களை விவரிக்க தேவை இல்லை. அனைத்தும் நாம் அறிந்ததே. நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயிப்பதற்கு வேத வசனத்தை பட்டயமாக நம் கைகளில் கொடுத்திருக்கிறார். ஒருவேளை மார்ட்டின் லூத்தர் காலத்துக்கு முன் நாம் பிறந்திருந்தால், வேத புத்தகம் கிடைத்திருக்கவே செய்யாது. இன்று வேதம் நம் கைகளில் தவழ்கிறது. விசுவாச வார்த்தைகளைப் பேச நமக்கு தடை கிடையாது. இயேசு சிலுவையில் வெற்றியை பெற்றதால், நாமும் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறோம். இதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 11

    Day – 11 (11- டிசம்பர், 2023) நல்ல சபை தந்தீர் நன்றி நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

    நீதிமான் நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *